Pages - Menu

Nov 18, 2009

CALLS FOR NOV 19

CLICK TO LARGE VIEW

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்

Nov 17, 2009

CALLS FOR NOV 18

CLICK TO LARGE VIEW

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்
update@3.05 pm
long sintex&essaroil

Nov 16, 2009

CALLS FOR NOV 17

CLICK TO LARGE VIEW
10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்

Nov 12, 2009

CALLS FOR NOV 13

CLICK TO LARGE VIEW

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்

CALLS FOR NOV 12

CLICK TO LARGE VIEW
10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்
update@9.30pm
long only suzlon

Nov 10, 2009

CALLS FOR NOV 11

CLICK TO LARGE VIEW

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்
update@3.25 pm
long hindmotor & nagerfert

Nov 9, 2009

CALLS FOR NOV 10

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்
update @7.00 pm
long only grasim

Nov 8, 2009

CALLS FOR NOV 9

10.30 க்கு மேல் HIGH உடைத்தால் மட்டும் வாங்கவும்
update @3.30
long only sesagoa

Sep 16, 2009

DAILY CALLS 16 SEP

REL INFRA

BUY ABOVE 1201 TARGET 1 1217 TARGET 2 1231
SL 1196

SELL BELOW 1195 TARGET 1 1184 TARGET 2 1165
SL 1201

RELIANCE
BUY ABOVE 2173 TARGET 1 2195 TARGET 2 2210
SL 2165

SELL BELOW 2165 TARGET 1 2153 TARGET 2 2126
SL 2173

Sep 12, 2009

weekly calls 14-9-09 to 18-9-09

REL INFRA

BUY ABOVE 1185 TARGET 1 1214 TARGET 2 1263
SL 1175

SELL BELOW 1175 TARGET 1 1130 TARGET 2 1095
SL 1185

RELIANCE
BUY ABOVE 2125 TARGET 1 2261 TARGET 2 2382
SL 2110

SELL BELOW 2110 TARGET 1 1997 TARGET 2 1854
SL 2125

ICICI
BUY ABOVE 815 TARGET 1 870 TARGET 2 906
SL 803

SELL BELOW 803 TARGET 1 773 TARGET 2 712
SL 815

Sep 6, 2009

WEEKLY CALLS 7-9-09 TO 11-9-09

REL INFRA

BUY ABOVE 1144 TARGET 1 1174 TARGET 2 1205
SL 1138

SELL BELOW 1138 TARGET 1 1110 TARGET 2 1077
SL 1144

RELIANCE
BUY ABOVE 1994 TARGET 1 2055 TARGET 2 2130
SL 1984

SELL BELOW 1984 TARGET 1 1914 TARGET 2 1848
SL 1994

ICICI
BUY ABOVE 750 TARGET 1 772 TARGET 2 800
SL 744

SELL BELOW 744 TARGET 1 719 TARGET 2 694
SL 750

UPDATE @ 12-SEP
CALLS PERFORMENCE

REL INFRA
BUY : 2 TARGET ACHIEVED HIGH 1229

RELIANCE
BUY : 2 TARGET ACHIEVED HIGH 2240

ICICI
BUY :2 TARGET ACHIEVED HIGH 845


Aug 30, 2009

weekly calls 31-8-09 to 4-9-09

REL INFRA

BUY ABOVE 1145 TARGET 1 1202 TARGET 2 1235
SL 1139

SELL BELOW 1139 TARGET 1 1109 TARGET 2 1049
SL 1145

RELIANCE
BUY ABOVE 2039 TARGET 1 2120 TARGET 2 2166
SL 2029

SELL BELOW 2029 TARGET 1 1988TARGET 2 1902
SL 2039

ICICI
BUY ABOVE 763 TARGET 1 776 TARGET 2 789
SL 759

SELL BELOW 759 TARGET 1 748 TARGET 2 733
SL 763

UPDATE @ 05-SEP
CALLS PERFORMENCE

REL INFRA
SELL :1 ST TARGET ACHIEVED

RELIANCE
SELL :1 ST TARGET ACHIEVED LOW 1923

ICICI
BUY :1 ST TARGET ACHIEVED
SELL: 2 TARGET ACHIEVED LOW 723



Aug 12, 2009

RANBAXY DAY VIEW

FII trading activity on NSE and BSE in Capital Market Segment(In Rs. Crores)
CategoryDateBuy ValueSell ValueNet Value
FII12-Aug-20092260.822765.81-504.99 (bearish)

Aug 11, 2009

RELIANCE INTRADAY VIEW 12-8-09

FII trading activity on NSE and BSE in Capital Market Segment(In Rs. Crores)
Category Date Buy Value Sell Value Net Value
FII 11-Aug-2009 2191.36 2368.83 -177.47(BEARISH)

Jun 28, 2009

TRADING SYSTEM

TRADING SYSTEM USING THREE AVERAGES
The system features three moving averages:
fast, middle and slow.

Entry points are determined by the middle moving average crossing the long moving average
and exit points by the fast moving average crossing the middle moving average:

Go long when:
middle moving average crosses to above slow moving average from below;
AND fast moving average is above middle moving average.

Close long when
fast moving average crosses to below middle moving average from above.

Go short when:
middle moving average crosses to below slow moving average from above;
AND fast moving average is below middle moving average.

Close short when
fast moving average crosses to above middle moving average from below.

Jun 17, 2009

என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்


fiximg1090323075_1_1.jpg

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள்

. பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர். சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.

1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.

பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார் , இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.

பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.

இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பா‌ரியையும், கோ‌ரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவ‌ரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்... நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.


May 10, 2009

சிரிக்கலாம் வாங்க 2

அடர்ந்த காட்டில்..
"ஏண்டா.. ஷூ மாட்டிக்கிறே?"
"புலி நம்மைப் பார்த்து துரத்துச்சி‎னா! அதுக்குத்தா‎ன்"
"புலியை விட வேகமா ஓடிடுவியோ?"
"புலியை விட வேகமா ஓடணும்னு அவசியம் இல்ல. உன்னை விட வேகமா ஓடினாலே போதும்!"

******
"எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்!"

******
நரகத்தில்...
"நா‎ன் என் கேர்ள் ஃபிரெண்டுக்கு கால் பண்ண‎ணும். இங்கே எவ்வளவு காசு ஆகும்?"
"காசெல்லாம் கிடையாது. நரகம் டூ நரகம் அ‎ன்லிமிட்டெட் ஃப்ரீதா‎ன்!"
******
"உங்க காலேஜுல சுமாரா எத்தனை பேரு இருப்பாங்க?"
"எ‎ங்க காலேஜுல எல்லாருமே பார்க்க சுமாராதான் இருப்பாங்க"
******
திருட‎ன் இரவில் வீட்டினுள் நு‏ழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, சிறுவ‎ன் விழித்துக் கொள்ள...
"ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவே‎ன்"
"நா‎ன் சத்தம் போடறதெல்லாம் இ‏ருக்கட்டும். போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'

இது நெட்டில் சுட்டது

May 7, 2009

விந்தை உலகம்

பொதுவாக பூகம்பங்கள் ஏற்படும் போது பயங்கரமான பூகம்பம் என்றே வர்ணிக்கப்படும். ஆனால் பிரிட்டனிலோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சிறிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாம்.

.
அந்நாட்டில் உள்ள லேக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாம். ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவான இந்த பூகம்பத்தால் லேசான அதிர்வுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

கட்டிடங்களில் லேசான அசைவு கள் உண்டானதை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். ஆனால் பொருட்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லையாம்.

********

உலகில் பலவிதமான இசைப் போட்டிகள் நடைபெற்றாலும், இதுபோன்ற புதுமையான போட்டி நடைபெற்றதில்லை என்று கூறும் வகையிலான போட்டி ஜெர்மனியில் நடைபெறுகிறதாம்.
.
மே மாதம் 10ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் என்ன விசேஷம் என்றால், இது பங்கேற்கப்போவது பாடகர்களோ, பாடகிகளோ இல்லை. தவளை குட்டிகள் தான். இதில் பங்கேற்கின்றனவாம்.

தவளை குட்டிகளின் பாடலை கேட்டு அவற்றில் சிறந்த பாடகரை தேர்வு செய்ய உள்ளனராம். இந்த போட்டியில் ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தவளை குட்டிகள் பங்கேற்கின்றனவாம்.
|
தவளைகளை பாதுகாக்கும் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக இந்த போட்டி நடைபெறுகிறதாம். இந்த ஆண்டு 2வது முறையாக போட்டி நடைபெறுவது குறிப்பிடத் தக்க விஷயம்.
**********

நடிகைகளும், பாடகிகளும் உடல் அழகை பேணிக் காப்பதில் எப் போதுமே தனிகவனம் செலுத்து வார்கள். இதற்காக அவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்தும் வகை யில் உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வகையில் பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கால்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கிறாராம்.

.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த பாடகி சமீபத்தில் பிரிட்டன் வருகை தந்தபோது அங்குள்ள கால்ப் மைதானத்தில் தனதுகாதலனோடு கால்ப் விளையாடி மகிழ்ந்தாராம். கால்ப் விளையாட்டு உற்சாகம் அளிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுவதாக அவர் கூறியுள்ளார்.

**********

அரசியல் அரங்கில் எத்தனையோ விதமான கட்சிகள் உதயமாவது உண்டு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம், ஒரு கொள்கை இருக்கும்.
.
ஜார்ஜியா நாட்டிலோ wine னுக்காக ஒரு கட்சி தொடங்கப் பட்டுள்ளதாம். அந்நாட்டைச் சேர்ந்த ஜியோர்ஜி ஷென்ஜாலியா என்பவர் இந்த கட்சியை தொடங்கியிருக்கிறாராம். ஒயின் தயாரிப்பில் தனது நாட்டுக்கு உள்ள பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த கட்சி செயல்படும் என்று அவர் கூறியிருக்கிறார். ஒயின் தயாரிப்பே ஜார்ஜியாவின் சின்னமாக இருப்பதால் அதனை ஊக்கு விப்பதற்காக தமது கட்சி பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

*********

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க


May 4, 2009

பேய் ஓட்டுபவர்கள் பற்றிய கட்டுரை

பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் ஆழமாக இருக்கிறது. அதனால் தான் தமிழகக் கிராமங்களில் பேய்க்கும் வைத்தியம் பாரு,நோய்க்கும் வைத்தியம் பாரு என்ற பழமொழி ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை உலாவுகிறது.

பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை விரட்டுவதற்கென்றே கிராமங்களில் பேய் ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குக் கோடாங்கிக்காரர் என்று பெயர். பேய் என்பது என்ன? பேய் எப்படி, யாரைப் பிடிக்கிறது? எதற்காகப் பிடிக்கிறது? அது எப்படி விரட்டப்படுகிறது என்று ஒரு கோடாங்கிக்காரா¢ன் அனுபவத்தைக் கேட்டோம். திடமான மனம் கொண்டவர்கள் மட்டும் மேலே படிக்கவும்.

5.....4.....3.....2.....1.......ரெடி ஸ்டார்ட்...........

சுமதிக்கு வயது 23. இவர் தனது குடும்பத்தினரோடு அடர்த்தியான காட்டின் மையப்பகுதியில் இருந்த தென்னந்தோப்பில் ஒரு நாள் தங்கி இருக்கிறார். நள்ளிரவு 1 மணி அளவில் தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தனது அப்பாவிற்கு டீ போட்டு அதனைத் தான் தங்கி இருந்த மோட்டார் ஷெட் அறையில் இருந்து சற்று தொலைவில் இருந்தவருக்கு நள்ளிரவு இருட்டில் கையில் ஒரு டார்ச் லைட் உதவியோடு கொண்டு சென்றார். ஒரு புளிய மரத்தைக் கடந்த உடன் தனக்கு முன்னால் திடீரென்று ஒரு ஆண் உருவம் கொடூரமான முகத்தோடு எழுந்து தன்னை நோக்கி வருவது போல் இவரது கண்ணுக்குத் தொ¢ந்து இருக்கிறது. அடுத்த வினாடி சுமதி மிரண்டு போய் டீ கிளாசைக் கீழே போட்டு விட்டு, அலறி அடித்துக் கொண்டு ஓடி, பின் மயங்கிக் கீழே விழுந்து விட்டார். பின் தனது மகளைத் தேடி வந்த பெற்றோர் மகளைக் கண்டு பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின் சுமதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பின் அவருக்குத் திருமணம் செய்யப்பட்டது. அதன் பின்பு தான் சுமதி காட்டில் பார்த்துப் பயந்த திகில் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. கணவனை அருகில் நெருங்கவே விடாத சுமதி நள்ளிரவில் எழுப்பும் அபாயக் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். அதன் பின்பு சுமதியின் தாய் வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்டு அவருக்குப் பேய் ஓட்ட கோடாங்கிக்காரர் சுடலைமாடனை அழைத்து வந்தனர். பேய் ஓட்டுவதை நோ¢ல் பாருங்கள் என்று நம்மை அழைத்த சுடலைமாடன் போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். நீண்ட தலை முடி, தாடி, வெற்றிலைக் கறையால் சிகப்பு நிறமாக மாறி இருக்கும் பற்கள் என அவரே சற்றுக் கொடூரமாகத்தான் காட்சி அளிக்கிறார்.

“பொதுவாக உருவம் இருக்கிறதோ இல்லையோ பேய் என்பது உலகில் இருக்கத் தான் செய்கிறது. அவற்றை துர்தேவதைகள் என்று நாங்கள் அழைக்கிறோம். இந்த துஷ்ட தேவதைகள் அனைத்து நேரங்களிலும் உலாவுவதில்லை. நள்ளிரவு நேரங்களில் தான் இவைகள் உலாவுகின்றன. ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், துன்பம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறர் கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் ஆகியோ¡¢ன் ஆவிகள் துஷ்ட தேவதைகள் வடிவில் உலாவுகின்றன. அந்த உருவங்களை 5 அறிவு கொண்ட மிருகங்கள் நன்கு உணரும். அதன் படி சுமதிக்கு நள்ளிரவில் ஒரு துஷ்ட தேவதை கண்ணுக்குத் தொ¢ந்திருக்கிறது. அதனை எப்படி ஓட்டுகிறேன் பாருங்கள்” என்று சொன்ன சுடலைமாடன் நம்மை ஓரமாக உட்கார வைத்து விட்டார். பொதுவாக மது அருந்திவிட்டுத்தான் பேய் ஓட்ட ஆரம்பிக்கிறார்.

ஒரு தனி அறை, அதில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி விளக்கு மட்டும் மெல்லியதாக எ¡¢கிறது. அந்த அறையில் பேய் பிடித்து இருப்பதாகச் சொல்லப்படும் சுமதி தலையை வி¡¢த்துப் போட்டுத் தரையில் உடைகள் கலைந்து கிடந்தார். அவரைச் சுற்றி வயதான பெண்கள் சிலர் உட்கார்ந்திருந்தனர். பேய் ஓட்டுபவர் ஏற்கனவே சுமதி வீட்டார் வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்துச் சுமதி தலையில் சூட்டினார். விலை உயர்ந்த ஊதுபத்திகளைக் கொளுத்தி மணம் வீசச் செய்தார். பின் தான் கொண்டு வந்திருந்த உடுக்கையை (இது தான் கோடங்கி எனப்படுகிறது) எடுத்து, உரத்த குரலில் பேய் ஓட்டுவதற்கு என்றே இருக்கும் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். தரையில் கிடந்த சுமதி உடுக்கை ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தவர் திடீரென்று தலையைச் சுற்றிச் சுற்றி உட்கார்ந்த படியே ஆட ஆரம்பித்தார். அவர் ஆட ஆடக் கோடங்கிக்காரர் வேகமாக உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார். இப்படி சுற்றியிருந்த பெண்கள் “நீ யார் என்று சொல்லு தாயி” என்று கேட்டுக் கொண்டும், பேய் ஓட்டுபவர் பாடலுக்கு ஜால்ரா போடுவதுமாக இருந்தனர். ஆனால் சுமதி வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ய்........ ஏய்........ என்ற கத்தலோடு நிறுத்திக் கொண்டார். இப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பித்த உடுக்கை அடி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்தது. சோர்வான கோடாங்கிக்காரர் மீதி ஆட்டத்தை நாளை வைத்துக் கொள்வோம் என்று சொல்லி பூஜை செய்தார். பின் அவருக்கு வாங்கி வைத்திருந்த சாராயம், 6 ஸ்பெ~ஷல் தோசை, மட்டன், சிக்கன் வகைகளை ஒரு பிடி பிடித்து விட்டு, பேய் பிடித்த சுமதி வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டார். சுமதிக்கும் குடிக்கப் பானம் கொடுத்து விட்டு அனைவரும் படுத்துக் கொண்டனர். பின் மறு நாள் பகல் 6 மணிக்கு உடுக்கை அடி ஆரம்பமானது. அதிகாலையில் அதிர்ந்த உடுக்கை ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்டது. அன்று இரவிலும் உடுக்கை அடிப்பது தொடர்ந்தது.

அன்று தான் சுமதி வாயைத் திறந்து பேச ஆரம்பித்தார். சுவாரஸ்யமான உரையாடல் இங்கே:

சுடலை: நீ யாரு தாயி?

சுமதி: (பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தோடு) நான் இசக்கியாத்தாடா

சுடலை: நீ ஏன் இந்தப் பெண்ணைப் பிடித்து இருக்கிறாய்?

சுமதி: நள்ளிரவில் நான் பசியோடு அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மூதேவி என்னைப் பற்றிய பயம் இல்லாமல் வந்து கொண்டிருந்தாள். அதனால் தான் நான் இவளைப் பிடித்துக் கொண்டேன்

சுடலை: பாவம் இந்தப் பெண், திருமணமாகிக் கணவனோடு வாழ முடியாமல் தவிக்கிறாள். இவளை விட்டு விடு, உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்.

சுமதி: எனக்கு சீர்வா¢சையோடு, ரத்தப்பிளி காட்டிப் பொங்கல் வை. நான் மலையேறி விடுகிறேன்

சுடலை: சா¢ உனக்கு நாளை பொங்கல் வைக்கிறோம்

தனது உடுக்கையை வேகமாக அடிக்கிறார் சுடலை. சுமதி வேகமாக உடுக்கை ஒலிக்கு ஏற்ப ஆடுகிறார். பின் பழையபடி பூஜை செய்து உடுக்கை அடிப்பது நிறுத்தப்படுகிறது.

மறுநாள் இசக்கியாத்தா தெய்வத்திற்குச் சீர் வா¢சை என்று உயிருடன் இருக்கும் ஒரு சேவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர், கொட்டாம்பட்டி, சேலை, தரமான மல்லிகைப் பூ, சாராயம், 6 முட்டைகள், எலுமிச்சம் பழம் என்று பல பொருட்கள் வாங்கப்படுகின்றன. பின் சுமதி சுமப்பதற்கு என்று சிறு கல் தயார்படுத்தப்பட்டு அதனைச் சுமதியின் தலையில் வைத்து அவரை ஊர்வலமாக ஒரு புளிய மரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். புளியமரம் வரும் வரை சுமதிக்கு 10க்கும் மேற்பட்ட சாட்டை அடி பேய் ஓட்டுபவரால் கொடுக்கப்படுகிறது. பின் சுமதி சுமந்து வரும் கல்லைக் கீழே போட்டு விட்டு அந்தப் புளியமரத்தில், கொண்டு வந்த சீர் வா¢சைகளைக் கட்டி விட்டு, சேவலை அறுத்து ரத்தம் காட்டிப் பொங்கலும் வைக்கப்பட்டுப் பின் சுமதியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். இங்கு தான் ஓர் அதிசயத்தை நாம் கவனிக்க வேண்டும். மேற்சொன்ன சடங்குகள் நிகழ்ந்த உடன் சுமதி தனது கணவனைப் பார்த்து வெட்கப்படுகிறார். அனைவா¢டமும் சகஜமாகப் பேசுகிறார். இதற்கு முன் பார்த்த சுமதியை விட இயல்பானவராக இருக்கிறார்.

பார்த்தீர்களா, என் பேய் ஓட்டும் திறமையை" என்று சொல்லித் தனது தலை முடியை உதறும் சுடலைமாடனுக்குப் பேய் ஓட்டியதற்காக 5000 ரூபாய் காணிக்கையாகத் தரப்படுகிறது.

பேய் ஓட்டுபவர் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தவுடன் சுமதியின் நெற்றியில் மை போன்ற ஒன்றை அடிக்கடி தடவுகிறார். அதே போல சுமதி பேய் ஆடும் பொழுது, உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் சுடலைமாடனின் கண்கள் சுமதியின் உடல் அங்கங்களைப் பார்ப்பதும், சில சமயங்களில் சுமதியின் உடலில் விபூதியைத் தடவும் சாக்கில் அவரை வக்கிரமாகத் தடவுவதும் நமக்கு என்னவோ போல இருக்கிறது. இதனை வேடிக்கை பார்க்கும் வயதான பெண்கள் கவனித்தாலும் அதனைக் குறை சொல்லுவதில்லை. இது பற்றி காணிக்கை வாங்கிக் கொண்டு திரும்பும் சுடலைமாடனிடம் கேட்ட பொழுது, “நாங்கள் இறைவனிடம் ஆசி பெற்றவர்கள். அதனால் தான் எங்களின் உடுக்கை அடிக்கு இசக்கியாத்தா, முனியாண்டி போன்ற தெய்வங்களின் மறுவடிவமான பேய்கள் கட்டுப்படுகின்றன. நீங்கள் உடுக்கை அடித்துப் பேயை விரட்டுங்கள் பார்ப்போம். பெண்களின் உடல் முழுவதும் விபூதி தடவ வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உடலைத் தொடுகிறேன்” என்றவா¢டம் “அப்படித் தெரியவில்லையே” என்று நாம் இழுக்க, “உனக்கு நேரம் சா¢யில்லை ஒழுங்காக வீடு போய்ச் சேர். இல்லை என்றால் உனக்கும் நான் தான் பேய் ஓட்ட வரவேண்டும்” என்று மிரட்டுகிறார்.

பேய் உண்மையிலேயே இருக்கிறதா, பெண்களுக்கு மட்டும் ஏன் பேய் பிடிக்கிறது என்று மேற்சொன்ன சம்பவத்தைச் சொல்லி மனநல மருத்துவர் சுந்தா¢டம் கேட்டோம். “பேய் என்பது உண்மை என்ற நம்பிக்கை உலகம் முழுவதிலும் இருக்கிறது. அதற்கு ஆதரவாக வரும் திரைப்படங்களும் அமோகமாக ஓடுகின்றன. ஆனால் பேய் உண்மையில் இல்லை. அது ஒரு மனப் பிரமை என்று சொல்லலாம். அதாவது மேற்சொன்ன சுமதி கதையை நாம் ஆராய்வோம். அவர் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் செல்லும் பொழுது ஓர் பயம் அவரது மனதில் இருந்திருக்கும். அப்பொழுது காற்றில் எதாவது மரத்தின் கிளை வேகமாக ஆடி ஒரு பேய் போன்ற பிரமை தோன்றி அவர் பயந்திருக்கலாம். அந்த பயம் ஆண்களைத் தனது பக்கத்தில் வர விடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். பின் திருமணமாகித் தனது கணவன் அருகில் வரும் பொழுது, அந்தப் பழைய பயம் மீண்டும் வேலை செய்கிறது. அதன் காரணமாக அவர் கத்தி இருக்கலாம். ஆனால் பேய் ஓட்டியதும், அதன் பின் நடக்கும் சடங்குகளைப் பார்த்துச் சுமதி தனது உடம்பில் பேய் எதுவும் இல்லை என்ற திருப்தி அடைந்து பின் இயல்பான வாழ்க்கைக்கு வந்திருப்பார். இது தான் உண்மை. அதாவது ஒருவரின் மனநலம் பாதிக்கும் பொழுது, அவரது மனசு தான் பாதிக்கப்படும். அவரது அறிவு பாதிக்கப்படாது. சுமதியை எங்களிடம் அழைத்து வந்தாலும் குணமாக்கி இருப்போம். ஆனால் கிராம மக்கள் பேய்களையும், பேய் ஓட்டுபவர்களையும் அதிகமாக நம்புகிறார்கள். கிராமங்களில், காடுகளில் மோசமான தேவதைகள் உலாவுகின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு ஆதிகாலத்திலிருந்து இருக்கிறது. இது தான் எங்களுக்குப் பொ¢ய சிக்கலாக இருக்கிறது. அதே போல் கிராமங்களில் ஆண்களை ஏன் பேய் பிடிப்பதில்லை? பெண்களை விட ஆண்கள் தான் கிராமத்தில் இரவு நேரங்களிலும் காட்டிற்குச் செல்கிறார்கள். அவர்கள் எதையும் பார்த்துப் பயப்படுவதில்லை. அதனால் அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள். அது சா¢, இந்தப் பேய்கள் ஏன் நகரப் பெண்களைப் பிடிப்பதில்லை? கிராமப் பெண்களை விட நகரப் பெண்கள் அழகாகவும், வனப்பாகவும் இருக்கிறார்கள் என்பது ஏன் இந்த பேய்களுக்குத் தொ¢வதில்லை? நகர்ப்பகுதியில் கோடங்கிக்காரர்கள் நுழைந்தால் அவர்களின் சாயம் வெளுத்து விடும்” என்கிறார்.

“பேய் ஓட்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று பொ¢யார் போராடியும் அவர்களை ஒழிக்க முடியவில்லை. பேய் ஓட்டுபவர்கள் சில சித்து விளையாட்டுக்களை வைத்துத் தான் பெண்களைப் பேய் ஆட வைக்கிறார்கள். பொதுவாக ஒரு இசையைக் கேட்டாலே நமக்கு ஆட வேண்டும் போல் இருக்கும். உடுக்கையின் அதிரடி ஓசையைக் கேட்டுத் தானாகவே ஆட ஆரம்பித்து விடுகிறார்கள், பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் இளகிய மனம் கொண்ட பெண்கள். பேய் ஆடும் பெண்களை எத்தனை முறை அடித்தாலும், அணைத்தாலும் கோடங்கிக்காரர்களை யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். இம்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று திராவிடக் கழகம் பல தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினாலும் அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த தினகரன்.

“பேய் என்பது இருக்கிறது. அதனை நான் உணர்ந்து இருக்கிறேன்” என்று சொல்லும் விவசாயி ரவி, “நான் ஒரு முறை செவ்வாய்க்கிழமை வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு காட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தேன். இருட்டில் பயம் இல்லாமல் செல்லும் எனக்குப் பின்னால் ஏதோ அபாயக் குரல் எழுப்பிக் கொண்டு யாரோ வருவது போலிருந்தது. யார் என்று குரல் கொடுத்தால் அமைதியாக இருக்கும். பின் நடந்தால் உடன் சரசர என்று நடக்கும். அன்று நான் பயந்தே போய் விட்டேன். எப்படியோ சமாளித்து வீட்டிற்குத் திரும்பி விட்டேன். வந்து எனது பாட்டியிடம் சொன்ன பொழுது இசக்கியாத்தாவும், முனியாண்டி சாமியும் செவ்வாய், வெள்ளிக்கிழமை வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு சென்றால் கூடவே வருவர் என்றார். அதனை நான் அன்று உணர்ந்தேன். சோதிக்க வேண்டுமெனில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு ஒரு காட்டுப் பகுதிக்குள் போய்ப் பாருங்கள் தொ¢யும்” என்கிறார் பழைய திகில் சம்பவத்தை அசை போட்டுக் கொண்டே.

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க


May 1, 2009

சில வியப்பூட்டும் ஆராய்ச்சிகள்

அளந்து சிரியுங்க..

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்?

வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.

ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு. சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".

குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)

அரண்டவன் கண்ணுக்கு

இரவில் தனியாக சாலையில் நடந்து செல்வதென்றாலே ஒருவித பயம். படித்த பல பேய்க்கதைகள் நினைவிற்கு வந்து சங்கடம் செய்யும். ஏன் இரவில்தான் பேய் வர வேண்டும்? பகல் என்றால் பேய்களுக்கு பயமா? இப்படி ஒரு ஆராய்ச்சி.

உண்மையில் அப்படியில்லையாம். மனிதர்களுக்குத்தான் இருளைக் கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறதாம். இதை அறிவியல் பூர்வமாக லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு நிரூபித்துள்ளது.

இருள் சூழ்ந்திருக்கும்போது நிழலைப் பார்த்து இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக்கொள்கிறது. கண்களால் காணும் காட்சி முழுமையாக மூளைக்குச் செல்வதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பந்துகளை வீசச் செய்தபோது வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும் மூளையையும் ஏமாற்றும் செயல். உண்மையில் பந்து வீசப்படாதபோது அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும் வீசப்பட்ட பந்து மற்ற இரு பந்துகளைப்போல மறைந்து விடுவதாகவும் மனது உருவகப்படுத்திக் கொள்கிறது. கம்ப்யூட்டர் மூலமாகவும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில் 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சோதனையின்போது உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தைவிட அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது.

இதன்மூலம் ஒளியில்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள் மூளையை ஏமாற்றும் வகையில் தோன்றுகின்றன. இதைத்தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்துகொள்கிறது எனச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குரங்கிலிருந்து பிறந்தவன்

பேச்சு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? குரங்குகளால் பேச முடியாதா? ஜெர்மன் குழுவினர்கள் இப்படி ஒரு ஆராய்ச்சி நடத்தினர்.

ஆசிய குட்டைவால் குரங்குகளைக் கொண்டு பல்வேறு ஒலிகளை எழுப்பி அவற்றை குரங்குகள் உணர்கின்றனவா என்று சோதிக்கப்பட்டது. அப்போது மனிதர்களைப்போலவே குரங்குகளுக்கும் மூளையில் ஒலிகளை உணரும் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது. ஒலியின் தன்மைக்கேற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் உறுதி செய்தார்கள். இதனால் குரங்குகள் தங்கள் இனத்துடன் பல்வேறு ஒலி சமிக்ஞை மூலம் பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் கண்டு கொள்கின்றனவாம். ஆனால் இவைகளால் பிற விலங்குகள், பூச்சிகள், இடி மழையின் ஒலிகளைத் துல்லியமாக அறிய முடிவதில்லை.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்குக் குரல் இழப்பு, செவித்திறன் இழப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது

குடிச்சாப் போகுமா துக்கம்?

குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.

இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது. பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.

மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க


Apr 30, 2009

சிரிக்கலாம் வாங்க 1

உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது.

****

மனைவியை இழப்பது என்பது ரொம்பக் கடினமானது. ஏனென்றால், என்னால் அது முடியவேயில்லை.

****

காதல் என்பது தன்னைத் தானே எமாற்றி கொள்ளும் ஒரு கொடிய நோய். கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும்.

****

திருமணத்திற்கும் இறப்பிற்கும் உள்ள வித்தியாசம் -
இறப்பவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்!

****

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் கணவன் தன் வாயை மூடிக்கொண்டு செக் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

****

உன்னுடைய பக்கத்து வீட்டவரை நேசி. ஆனால் கணவன் ஊரில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொள்!

****

மிகவும் மகிழ்ச்சியான திருமணம் என்பது காது கேளாதவனைக் கண் தெரியாத பெண் மணந்து கொள்வதுதான்!

****

உன்னை விட்டு அகலாத, சிறிதும் வளராத ஒரே குழந்தை உன் கணவன்தான்!

****

பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!

****

உன்னுடைய கல்யாணம் என்னும் கோப்பை மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க வேண்டுமென்றால்,
எப்போது உன்னிடம் தப்பு இருந்தாலும் உடனே ஒத்துக்கொள்!

எப்போது நீ சரியாக இருந்தாலும் வாயை மூடிக் கொள்! -

இது நண்பர் மெயிலில் அனுப்பியது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க



Apr 29, 2009

சிரிக்கலாம் வாங்க

ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்

மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்

இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், "ஜோன்ஸ் மேரீட்"

***

தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?

மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.

***

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

***

ஜோன்ஸும் அவரது நண்பர் பாண்டுவும் எகிப்தின் மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர் அது மம்மி எனத் தெரியாமல்.

ஜோ : ஏகப்பட்ட பேண்டேஜ் போட்டிருக்காங்கப்பா.. பக்கா லாரி ஆக்சிடெண்ட் கேஸ் போலத் தெரியுது.

பா : ஆமாப்பா... .லாரி கேஸ் தான். லாரி நம்பர் கூடப் போட்டிருக்கே!! BC 1760.

***

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.

இது நண்பர் மெயிலில் அனுப்பியது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே

கிளிக்குங்க


பெண்களின் 64 கலைகள்

இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறும் கலைகள் ஏராளம். ஆனால் இவை எல்லாம் முன்பே நமது பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியமாக இல்லை?

அது மட்டுமல்ல, இவற்றில் எப்படி பாண்டித்தியம் பெறுவது என்பதை விளக்கமாகக் கூறும் நூல்கள் சுவடிகளாக ஆயிரக்கணக்கில் உள்ளன.

இப்படி, பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன. இன்று பெண்கள் ஆர்வம் காட்டுவனவற்றை அவர்கள் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதால் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் குறிப்பிடப் புகுந்தால் கீழ்க்கண்டவற்றை உடனே குறிப்பிடலாம்: டான்ஸ் (ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நடனங்கள்), கொண்டை அலங்காரம் உள்ளிட்ட ப்யூடி பார்லர், ஜெம்மாலஜி, ஆர்கிடெக்சர், டெக்னிகல் ஸ்டடீஸ், ஸ்டோரி டெல்லிங், இன்டீரியர் டெகொரேஷன், குக்கிங் வெரைட்டீஸ், கார்டனிங், கால் சென்டர், மேக்-அப் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது. (வாத்ஸாயனர் மஹரிஷி வேறு காமசூத்திரத்தில் பெண்களுக்குரிய 64 கலைகளைப் பட்டியலிட்டுள்ளார்!)

கல்பசூத்திரம் குறிப்பிடும் 64 கலைகள் வருமாறு:-

1) நாட்டியம் 2) ஔசித்யம் 3) ஓவியம் 4) வாஜித்ரம் 5) மந்திரம் 6) தந்திரம் 7) தனவ்ருஷ்டி 8) கலா விஹி 9) சம்ஸ்க்ருத வாணி 10) க்ரியா கல்பம் 11) ஞானம் 12) விஞ்ஞானம் 13) தம்பம் 14) ஜலஸ்தம்பம் 15) கீதம் 16) தாளம் 17) ஆக்ருதி கோபன் 18) ஆராம் ரோபன் 19) காவ்ய சக்தி 20) வக்ரோக்தி 21) நர லக்ஷணம் 22) கஜ பரிட்சை 23) அசுவ பரிட்சை 24) வாஸ்து சுத்தி 25) லகு வ்ருத்தி 26) சகுன விசாரம் 27) தர்மாசாரம் 28) அஞ்சன யோகம் 29) சூர்ண யோகம் 30) க்ருஹி தர்மம் 31) சுப்ரஸாதன் கர்ம 32) சோனா சித்தி 33) வர்ணிக வ்ருத்தி 34) வாக் பாடவ் 35) கர லாகவ் 36) லலித சரண் 37) தைல சுரபீகரண் 38) ப்ருத்யோபசார் 39) கோஹாசார் 40) வியாகரணம் 41) பர நிராகரண் 42) வீணா நாதம் 43) விதண்டாவாதம் 44) அங்கஸ்திதி 45) ஜனாசார் 46) கும்ப ப்ரம 47) சாரி ஸ்ரமம் 48)) ரத்னமணி பேதம் 49) லிபி பரிச்சேதம் 50) வைக்ரியா 51) காமா விஷ்கரண் 52) ரந்தன் 53)கேஸ பந்தன் 54) ஷாலி கண்டன் 55) முக மண்டன் 56) கதா கதன் 57) குஸ¤ம க்ரந்தன் 58) வர வேஷ 59) சர்வ பாஷா விசேஷ 60) வாணிஜ்ய விதி 61) போஜ்ய விதி 62) அபிதான பரிஞான் 63) ஆபூஷண தாரண் 64) அந்த்யாக்ஷ¡ரிகா

இவற்றில் பொருள் விளங்காமல் இருக்கும் கலைகளைப் பற்றி மட்டும் இங்கு ஓரிரு வரிகளில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஔசித்யம் என்றால் சரியானவற்றை, தகுந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு . இந்த ஒரு கலையிலேயே ஷாப்பிங்கில் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அடங்கி விடும்! வாஜித்ரம் என்றால் வாத்ய யந்திரங்களைப் பற்றிய அறிவாகும் க்ரியா கல்பம் என்றால் இன்ன வியாதி தான் வந்திருக்கிறது என்று முடிவாக நிர்ணயம் செய்வதற்கான வழி முறைகள் பற்றிய அறிவு. ஆக்ருதி கோபன் என்றால் முக பாவங்களை மறைத்தல். ஆராம் ரோபன் என்றால் நந்தவனம் தோட்டம் உபவனம் ஆகியவற்றை உருவாக்கும் அறிவு. நர லக்ஷணம் என்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணத்தைப் பற்றிய அறிவு.

கஜ பரிட்சை என்றால் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய அறிவு. அசுவ பரிட்சை என்றால் பத்து வகையான குதிரைகளைப் பற்றிய அறிவு. வாஸ்து சுத்தி என்றால் கட்டிடக் கலை பற்றிய முழு அறிவு. லகு வ்ருத்தி என்றால் சிறியதாக இருப்பதை பெரியதாக அபிவிருந்தி செய்யும் கலை. சகுன விசாரம் என்றால் பட்சிகள் மற்றும் இதர வகையிலான சகுனங்களை அறிந்து காரியம் வெற்றி பெறுமா எனக் கூறும் அறிவு. சூர்ண யோகம் என்றால் நல்ல மணமுள்ள திரவியங்களைக் கலக்கும் கலை.

வர்ணிக வ்ருத்தி என்றால் குணங்களை விவரித்துச் சொல்லப்படும் பெரிய கதைகளைச் சொல்லும் கலை, வாக் பாடவ் என்றால் வாக்கு சாதுரியம், பேச்சுக்கலை கர லாகவ் என்றால் கைகள் மூலம் செய்யும் தந்திரங்கள் மற்றும் கலைகள்! லலித சரண் என்றால் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் (கோரோகிராபி). தைல சுரபீகரண் என்றால் எட்டு விதமான எண்ணெய்களைத் தயாரிக்கும் விதம், அதை மஸாஜ் உள்ளிட்ட வகைகளில் பயன்படுத்தும் அறிவு. ப்ருத்யோபசார் என்றால் சிருஷ்டியில் உள்ள ஜட சேதனங்களுக்கான சேவை பற்றிய கலை. கோஹசார் என்றால் இல்லத்தரசிகள் இல்லங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய கலை.

வியாகரணம் என்றால் இலக்கணம் கும்ப ப்ரம என்றால் தங்கம் போலவே தோற்றமளிக்கும் போலி தங்கத்தைத் தயாரிக்கும் அறிவு. ரத்னமணி பேதம் என்றால் ரத்னங்களின் பேதங்களை அறிவது அதை பரிட்சை செய்து பார்ப்பது உள்ளிட்ட நவரத்தினங்களைப் பற்றிய அறிவு. லிபி பரிச்சேதம் என்றால் எழுத்துக்களை அழகுற எழுதும் பல்வேறு முறைகள். காமா விஷ்கரண் என்றால் ஊடலும் கூடலும் மற்றும் இதர தாம்பத்ய விஷயங்கள் பற்றிய அறிவு.

ரந்தன் என்றால் உணவு தயாரிக்கும் கலை. கேஸ பந்தன் என்றால் கேஸப் பராமரிப்பு, கொண்டைகள் போடும் விதம் உள்ளிட்ட கேஸ சம்பந்தமான முழு அறிவு. ஷாலி கண்டன் என்றால் வசந்த காலத்தில் நடைபெறும் பெரும் கலைவிழா நடத்தும் அறிவு. கதா கதன் என்றால் கதை சொல்லும் திறமை. இது ஒரு பிரம்மாண்டமான கலை. வர வேஷ என்றால் பதி (கணவன்) போல வேஷம் போடுதல். சர்வ பாஷா விசேஷ என்றால் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெறுதல்.

வாணிஜ்ய விதி என்றால் அனைத்து வியாபாரங்களையும் செய்யும் திறன். அபிதான பரிஞான் என்றால் அகராதியில் உள்ளவை அனைத்தையும் அறிவது. ஆபூஷண தாரண் என்றால் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்து கொள்ளும் கலை. அந்த்யாக்ஷ¡ரிகா என்றால் உடனடியாக நினைவிலிருந்து கேட்ட பாடலைப் பாடும் திறன்.

மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை. எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

சரஸ்வதி மஹால் உள்ளிட்ட பல்வேறு உலக நூலகங்களில் அபார அறிவு தரும் ஏராளமான நமது நூல்கள் சுவடிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பெண் குழுவும் ஒரு சுவடி நூலைப் பதிப்பு நூலாக வெளியிடுவது என்று முடிவு செய்தால் புராதன கலை அறிவு இன்றைய 55 கோடி பெண்களை தேசம் முழுவதும் சென்று சேரும். இப்படிச் செய்யவில்லை என்றால் மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுக்க முயன்ற கதை போல அனைத்து அறிவும் சுவடிகள் உள்ள அந்தந்த நாடுகள் உரிமை கொண்டாடி பேடண்ட் எடுக்கும் நிலை விரைவில் ஏற்படும்.

ஆகவே தமிழ் பெண்மணிகள் சேர்வார்களா? சேர்ந்து செய்வார்களா? சேர வேண்டும்! செய்ய வேண்டும்!

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post