Pages - Menu

Apr 30, 2009

சிரிக்கலாம் வாங்க 1

உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது.

****

மனைவியை இழப்பது என்பது ரொம்பக் கடினமானது. ஏனென்றால், என்னால் அது முடியவேயில்லை.

****

காதல் என்பது தன்னைத் தானே எமாற்றி கொள்ளும் ஒரு கொடிய நோய். கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும்.

****

திருமணத்திற்கும் இறப்பிற்கும் உள்ள வித்தியாசம் -
இறப்பவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்!

****

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் கணவன் தன் வாயை மூடிக்கொண்டு செக் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

****

உன்னுடைய பக்கத்து வீட்டவரை நேசி. ஆனால் கணவன் ஊரில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொள்!

****

மிகவும் மகிழ்ச்சியான திருமணம் என்பது காது கேளாதவனைக் கண் தெரியாத பெண் மணந்து கொள்வதுதான்!

****

உன்னை விட்டு அகலாத, சிறிதும் வளராத ஒரே குழந்தை உன் கணவன்தான்!

****

பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!

****

உன்னுடைய கல்யாணம் என்னும் கோப்பை மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க வேண்டுமென்றால்,
எப்போது உன்னிடம் தப்பு இருந்தாலும் உடனே ஒத்துக்கொள்!

எப்போது நீ சரியாக இருந்தாலும் வாயை மூடிக் கொள்! -

இது நண்பர் மெயிலில் அனுப்பியது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க



Apr 29, 2009

சிரிக்கலாம் வாங்க

ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்

மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்

இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், "ஜோன்ஸ் மேரீட்"

***

தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?

மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.

***

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

***

ஜோன்ஸும் அவரது நண்பர் பாண்டுவும் எகிப்தின் மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர் அது மம்மி எனத் தெரியாமல்.

ஜோ : ஏகப்பட்ட பேண்டேஜ் போட்டிருக்காங்கப்பா.. பக்கா லாரி ஆக்சிடெண்ட் கேஸ் போலத் தெரியுது.

பா : ஆமாப்பா... .லாரி கேஸ் தான். லாரி நம்பர் கூடப் போட்டிருக்கே!! BC 1760.

***

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.

இது நண்பர் மெயிலில் அனுப்பியது

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே

கிளிக்குங்க


பெண்களின் 64 கலைகள்

இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறும் கலைகள் ஏராளம். ஆனால் இவை எல்லாம் முன்பே நமது பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியமாக இல்லை?

அது மட்டுமல்ல, இவற்றில் எப்படி பாண்டித்தியம் பெறுவது என்பதை விளக்கமாகக் கூறும் நூல்கள் சுவடிகளாக ஆயிரக்கணக்கில் உள்ளன.

இப்படி, பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன. இன்று பெண்கள் ஆர்வம் காட்டுவனவற்றை அவர்கள் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதால் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் குறிப்பிடப் புகுந்தால் கீழ்க்கண்டவற்றை உடனே குறிப்பிடலாம்: டான்ஸ் (ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நடனங்கள்), கொண்டை அலங்காரம் உள்ளிட்ட ப்யூடி பார்லர், ஜெம்மாலஜி, ஆர்கிடெக்சர், டெக்னிகல் ஸ்டடீஸ், ஸ்டோரி டெல்லிங், இன்டீரியர் டெகொரேஷன், குக்கிங் வெரைட்டீஸ், கார்டனிங், கால் சென்டர், மேக்-அப் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது. (வாத்ஸாயனர் மஹரிஷி வேறு காமசூத்திரத்தில் பெண்களுக்குரிய 64 கலைகளைப் பட்டியலிட்டுள்ளார்!)

கல்பசூத்திரம் குறிப்பிடும் 64 கலைகள் வருமாறு:-

1) நாட்டியம் 2) ஔசித்யம் 3) ஓவியம் 4) வாஜித்ரம் 5) மந்திரம் 6) தந்திரம் 7) தனவ்ருஷ்டி 8) கலா விஹி 9) சம்ஸ்க்ருத வாணி 10) க்ரியா கல்பம் 11) ஞானம் 12) விஞ்ஞானம் 13) தம்பம் 14) ஜலஸ்தம்பம் 15) கீதம் 16) தாளம் 17) ஆக்ருதி கோபன் 18) ஆராம் ரோபன் 19) காவ்ய சக்தி 20) வக்ரோக்தி 21) நர லக்ஷணம் 22) கஜ பரிட்சை 23) அசுவ பரிட்சை 24) வாஸ்து சுத்தி 25) லகு வ்ருத்தி 26) சகுன விசாரம் 27) தர்மாசாரம் 28) அஞ்சன யோகம் 29) சூர்ண யோகம் 30) க்ருஹி தர்மம் 31) சுப்ரஸாதன் கர்ம 32) சோனா சித்தி 33) வர்ணிக வ்ருத்தி 34) வாக் பாடவ் 35) கர லாகவ் 36) லலித சரண் 37) தைல சுரபீகரண் 38) ப்ருத்யோபசார் 39) கோஹாசார் 40) வியாகரணம் 41) பர நிராகரண் 42) வீணா நாதம் 43) விதண்டாவாதம் 44) அங்கஸ்திதி 45) ஜனாசார் 46) கும்ப ப்ரம 47) சாரி ஸ்ரமம் 48)) ரத்னமணி பேதம் 49) லிபி பரிச்சேதம் 50) வைக்ரியா 51) காமா விஷ்கரண் 52) ரந்தன் 53)கேஸ பந்தன் 54) ஷாலி கண்டன் 55) முக மண்டன் 56) கதா கதன் 57) குஸ¤ம க்ரந்தன் 58) வர வேஷ 59) சர்வ பாஷா விசேஷ 60) வாணிஜ்ய விதி 61) போஜ்ய விதி 62) அபிதான பரிஞான் 63) ஆபூஷண தாரண் 64) அந்த்யாக்ஷ¡ரிகா

இவற்றில் பொருள் விளங்காமல் இருக்கும் கலைகளைப் பற்றி மட்டும் இங்கு ஓரிரு வரிகளில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஔசித்யம் என்றால் சரியானவற்றை, தகுந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு . இந்த ஒரு கலையிலேயே ஷாப்பிங்கில் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அடங்கி விடும்! வாஜித்ரம் என்றால் வாத்ய யந்திரங்களைப் பற்றிய அறிவாகும் க்ரியா கல்பம் என்றால் இன்ன வியாதி தான் வந்திருக்கிறது என்று முடிவாக நிர்ணயம் செய்வதற்கான வழி முறைகள் பற்றிய அறிவு. ஆக்ருதி கோபன் என்றால் முக பாவங்களை மறைத்தல். ஆராம் ரோபன் என்றால் நந்தவனம் தோட்டம் உபவனம் ஆகியவற்றை உருவாக்கும் அறிவு. நர லக்ஷணம் என்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணத்தைப் பற்றிய அறிவு.

கஜ பரிட்சை என்றால் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய அறிவு. அசுவ பரிட்சை என்றால் பத்து வகையான குதிரைகளைப் பற்றிய அறிவு. வாஸ்து சுத்தி என்றால் கட்டிடக் கலை பற்றிய முழு அறிவு. லகு வ்ருத்தி என்றால் சிறியதாக இருப்பதை பெரியதாக அபிவிருந்தி செய்யும் கலை. சகுன விசாரம் என்றால் பட்சிகள் மற்றும் இதர வகையிலான சகுனங்களை அறிந்து காரியம் வெற்றி பெறுமா எனக் கூறும் அறிவு. சூர்ண யோகம் என்றால் நல்ல மணமுள்ள திரவியங்களைக் கலக்கும் கலை.

வர்ணிக வ்ருத்தி என்றால் குணங்களை விவரித்துச் சொல்லப்படும் பெரிய கதைகளைச் சொல்லும் கலை, வாக் பாடவ் என்றால் வாக்கு சாதுரியம், பேச்சுக்கலை கர லாகவ் என்றால் கைகள் மூலம் செய்யும் தந்திரங்கள் மற்றும் கலைகள்! லலித சரண் என்றால் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் (கோரோகிராபி). தைல சுரபீகரண் என்றால் எட்டு விதமான எண்ணெய்களைத் தயாரிக்கும் விதம், அதை மஸாஜ் உள்ளிட்ட வகைகளில் பயன்படுத்தும் அறிவு. ப்ருத்யோபசார் என்றால் சிருஷ்டியில் உள்ள ஜட சேதனங்களுக்கான சேவை பற்றிய கலை. கோஹசார் என்றால் இல்லத்தரசிகள் இல்லங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய கலை.

வியாகரணம் என்றால் இலக்கணம் கும்ப ப்ரம என்றால் தங்கம் போலவே தோற்றமளிக்கும் போலி தங்கத்தைத் தயாரிக்கும் அறிவு. ரத்னமணி பேதம் என்றால் ரத்னங்களின் பேதங்களை அறிவது அதை பரிட்சை செய்து பார்ப்பது உள்ளிட்ட நவரத்தினங்களைப் பற்றிய அறிவு. லிபி பரிச்சேதம் என்றால் எழுத்துக்களை அழகுற எழுதும் பல்வேறு முறைகள். காமா விஷ்கரண் என்றால் ஊடலும் கூடலும் மற்றும் இதர தாம்பத்ய விஷயங்கள் பற்றிய அறிவு.

ரந்தன் என்றால் உணவு தயாரிக்கும் கலை. கேஸ பந்தன் என்றால் கேஸப் பராமரிப்பு, கொண்டைகள் போடும் விதம் உள்ளிட்ட கேஸ சம்பந்தமான முழு அறிவு. ஷாலி கண்டன் என்றால் வசந்த காலத்தில் நடைபெறும் பெரும் கலைவிழா நடத்தும் அறிவு. கதா கதன் என்றால் கதை சொல்லும் திறமை. இது ஒரு பிரம்மாண்டமான கலை. வர வேஷ என்றால் பதி (கணவன்) போல வேஷம் போடுதல். சர்வ பாஷா விசேஷ என்றால் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெறுதல்.

வாணிஜ்ய விதி என்றால் அனைத்து வியாபாரங்களையும் செய்யும் திறன். அபிதான பரிஞான் என்றால் அகராதியில் உள்ளவை அனைத்தையும் அறிவது. ஆபூஷண தாரண் என்றால் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்து கொள்ளும் கலை. அந்த்யாக்ஷ¡ரிகா என்றால் உடனடியாக நினைவிலிருந்து கேட்ட பாடலைப் பாடும் திறன்.

மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை. எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

சரஸ்வதி மஹால் உள்ளிட்ட பல்வேறு உலக நூலகங்களில் அபார அறிவு தரும் ஏராளமான நமது நூல்கள் சுவடிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பெண் குழுவும் ஒரு சுவடி நூலைப் பதிப்பு நூலாக வெளியிடுவது என்று முடிவு செய்தால் புராதன கலை அறிவு இன்றைய 55 கோடி பெண்களை தேசம் முழுவதும் சென்று சேரும். இப்படிச் செய்யவில்லை என்றால் மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுக்க முயன்ற கதை போல அனைத்து அறிவும் சுவடிகள் உள்ள அந்தந்த நாடுகள் உரிமை கொண்டாடி பேடண்ட் எடுக்கும் நிலை விரைவில் ஏற்படும்.

ஆகவே தமிழ் பெண்மணிகள் சேர்வார்களா? சேர்ந்து செய்வார்களா? சேர வேண்டும்! செய்ய வேண்டும்!

Apr 27, 2009

வட்டுக்கிளி - எறும்பு

வட்டுக்கிளி - எறும்பு கதை உங்களுக்குத் தெரியுமா? அதுதாங்க,. கோடை காலம் முழுதும் எறும்புக் கூட்டம் வேலை பார்க்கும். வெட்டுக்கிளி ஆடிப்பாடி ஆனந்திக்கும்.

குளிர்காலம் வந்தவுடன் எல்லா எறும்புகளுக்கும் உணவு களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். ஆடிப்பாடிய வெட்டுக்கிளி உணவில்லாமல் வருந்திக் கிடக்கும். அதே கதைதான். டிஸ்னி கூட கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி bug's life அப்படின்னு ஒரு சினிமா எடுத்தாங்களே அதே கதை தான்.

சரி சரி அந்தக் கதைக்கு இப்ப என்ன தேவை அப்படின்னு கேட்கிறீர்களா? சுறுசுறுப்புக்கும் விடா முயற்சிக்கும் எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்த எறும்பு இனத்தை பத்தி கொஞ்சம் உங்களுடன் பேசலாம் என்றுதான். ஜன்னல் ஓரமா மழைக்காலத்தில் உட்கார்ந்து எறும்புகள் சாரைசாரையா சுவர் ஒரமாக கறுப்புக் கோடு போட்டுக் கொண்டு போவதை பார்த்திருக்கொண்டிருக்கும் போது "உருப்படியான வேலையை போய் பாரு" ன்னு அப்பா தலையில் தட்டினது ஞாபகம் வருதா? அப்படி எறும்பு கரப்பான் பூச்சி, தேனீ வகைகளை ஆராய்ந்து பார்த்து பெரிய ஆளாயிட்டார் ஒருத்தர். சார்லஸ் டர்னர் என்ற அமெரிக்க அறிஞர் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதிலிருந்து எறும்புகளைப் பத்தி மிகத் துல்லியமா ஆராய்ந்து எழுதிய இரண்டு புத்தகங்களுக்காக சிகாகோ பல்கலை கழகம் அவருக்கு பி.எச்.டி பட்டம் வழங்கியது. இயற்கையை பற்றி இவர் சிறுவர்களுக்கு கதைகள் எழுதியிருக்கிறார். அதை எல்லாம் பாராட்டி அவர் இறந்தவுடன் உடல் ஊனமுற்ற பள்ளி ஒன்று அவர் நினைவில் செயிண்ட் லூயிசில் கட்டப்பட்டது. அட நம்ம அப்பா அன்றைக்கு தலையில் தட்டாமல் இருந்திருந்தால் நம்ம கூட இப்ப பெரிய ஆளாயிருக்கலாம் என்று தோன்றுகிறதா?

அப்ப வாங்க! அன்று விட்ட வேலையை இன்றைக்குத் தொடருவோம். கம்ப்யூட்டரை விட்டு எங்கே எழுந்து போறீங்க? ஓ சர்க்கரை பாட்டில் பக்கமா எறும்பை தேடிப் போறீங்களா? எல்லா எறும்பும் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவதில்லை. மத்திய மற்றும் தென் அமரிக்காவில் வாழும் ஒரு வகையின் பெயர் இலை வெட்டி எறும்பு. பெயரைப் பார்த்தவுடனே தெரிந்திருக்குமே அந்த எறும்புகளின் உணவு எது என்று? பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும் இந்த எறும்புகள் ஒல்லியான உடல் வாகும், நீளமான கால்களும் கொண்டவை. 0.1 அங்குலம் முதல் 0.5 அங்குலம் வரை அவற்றின் நீளம் இருக்கும். இந்த எறும்புகள் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள காடுகளில் காலம் காலமாக வசிக்கின்றன. மரங்களின் வேருக்கும் பனிரெண்டு அடி கீழே பூமிக்குள்ளே இவை வசிக்கின்றன. மண்ணுக்குள் மறைந்து இருக்கும் தொழிலாளி எறும்புகள் இரவு நேரத்தில் மண்ணை விட்டு சாரைசாரையாக வெளியே வருகின்றன. தங்களுக்கு பிடித்தமான ஒருவித இலைகளையே அவை உண்ணுவதால் தங்கள் இருப்பிடத்தைவிட்டு அவை அரை மைல் தூரம் சாரை சாரையாக படை எடுத்து வருகின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒருவித மணத்தை தங்களுடைய வழியில் இவைவிட்டுச் செல்கின்றன. இதன் மூலம் அவை தங்களுடைய இருபிடத்திற்கு சரியாகச் செல்ல முடியும். காட்டில் பரவிக்கிடக்கும் எல்லா இடங்களிலிருந்தும் இலைகளைச் சேகரிக்கின்றன. இப்படி தங்கள் இருப்பிடத்தைவிட்டு தொலை தூரம் வருவதால் அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி இருக்கும் மரங்கள் அழிக்கப் படுவது இல்லை. என்ன ஒரு முன் ஜாக்கிரதை!

கத்திரிக்கோல் வடிவத்தில் இருக்கும் தங்களுடைய தாடையினால் இலைகளை கடித்து எடுத்துக் கொண்டு அவை மீண்டும் தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடக்கின்றன. ஒவ்வொரு எறும்பும் தன் எடையைவிட முப்பது மடங்கு அதிகமான எடை பளுவைத் தூக்கிச் செல்கிறது. பயணக் களைப்பில் அசதியாக இருந்தால் தான் எடுத்துவரும் இலையை பக்கத்தில் வரும் அடுத்த எறும்பிடம் கொடுத்து விடுகின்றன.

நிலத்தடியில் இலைகள் கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறையில் சேகரிக்கப் படுகின்றன. அங்கே இருக்கும் மற்ற தொழிலாளி எறும்புகள் இலைகளை சிறுக சிறுக மென்று ஒரு பந்தாக மாற்றுகின்றன. கடித்து எடுத்து வரும் இலைத் துண்டுகளை அப்படியே சாப்பிட்டால் அந்த எறும்புகள் இறந்துவிடும். இப்படி மென்று பந்தாக துப்புவதால் இலைகளிம் மேலிருக்கும் இலைகளின் மென்மையான பாதுகாப்பு மேல் பூச்சு அகற்றப் படுகிறது. அந்த பந்துகளிலிருந்து ஒரு வகை காளான் வளருகிறது, இந்த காளான் மட்டுமே இந்த எறும்புகளின் ஒரே உணவு. மறு நாள் இந்த வேலை தொடர்ந்து நடை பெறுகிறது. ஒரு எறும்பு புத்தில் ஐந்து மில்லியனுக்கும் மேலான எறும்புகள் வாழ்கின்றன. அவை அனைத்திற்கும் உணவு இந்தக் காளான்தான். அதனால் நிற்காமல் இந்த வேலை தினம் தினம் நடந்து கொண்டேயிருக்கிறது. இனி நாம் அட என்ன இது இயந்திர வாழ்க்கை என்று அலுத்துக் கொள்வத்ற்கு பதில் என்ன இது இலை வெட்டி எறும்பு வாழ்க்கை என்று அலுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே! என்ன சொல்கிறீர்கள்?

காளான்கள் வளரும் அறையில் ராணி எறும்பு வசிக்கிறது, தன்னுடைய கழிவுப் பொருட்களாலேயே தன்னுடைய கூட்டை அது கட்டிக் கொள்கிறது. தினம் தினம் முட்டையிடுவது மட்டுமே அதன் வேலை. ஒரு நாளுக்கு முப்பதாயிரம் முட்டைகள் இடுமாம் அம்மாடியோவ்! ஒரு குழந்தை பெறுவதற்குள்ளே இந்த பெண்கள் படும் பாடும் படுத்தும் பாடும் இருக்கிறதே! இந்த எறும்புக்கு நாம் கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும்.

இந்த இலை வெட்டி எறும்புகள் சுத்ததிற்கு பெயர் போனவை. இறந்த எறும்புகள், மற்ற கழிவுகளை மண்ணுக்கடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேகரித்து வைக்கின்றன. சிலசமயம் மண்ணுக்கு வெளியேயையும் குவியலாகக் கொட்டி வைக்கின்றன. நம் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டில் கொட்டும் தாய்மார்களும், அழுக்குத் துணிகளை சலவைக்குப் போடமால் குப்பை போல சேர்த்து வைக்கும் தந்தைமார்களும் இந்த எறும்புகளிடமிருந்து கொஞ்சம் பாடம் கற்றுக் கொள்ளலாமே?

இந்த எறும்பு இனங்கள் சேர்க்கும் குப்பை மண்ணுக்கும் மரத்திற்கும் ஒரு நல்ல உரமாகிறது. இங்கு நடக்கும் இயற்கையின் சக்கரத்தை கவனியுங்கள். பூமிக்கு மேலே எறும்புகள் இலைகளைத் தின்று புது இலைகள் துளிர்வதற்குக் காரணமாகின்றன. உள்புறத்தில் எறும்புகளின் பாதுகாப்பில் காளான்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக வளர்கின்றன. எறும்புகளுக்கு இடைவிடாது உணவு கிடைக்கிறது. காளான் மற்றும் எறும்புகளின் கழிவு பூமத்திய ரேகை பகுதி காடுகள் அடர்ந்து செழித்து வளர உரமாகின்றன. இவை அத்தனையும் நடப்பது மனித கண்ணுக்குத் தெரியாமல் மண்ணின் அடியில் நடக்கிறது. என்ன ஒரு விந்தை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால் பூமத்திய ரேகை காடுகள் அழிக்கப்பட்டு காபி தோட்டங்களாக்கப்பட்டதும் இந்த எறும்புகள் விவசாயத்தை அழிக்கும் பூச்சிகளாக கருதப்பட்டு அவற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எறும்புகளை ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு போகட்டும் என்று ஏன் அந்த விவசாயிகள் நினைக்க வில்லை? அது தான் இலவசமாய் செழிப்பான் உரம் கிடைக்குதேன்னு யோசிக்கிறீர்களா? ஒரு நாளைக்கு ஒரு பசுமாடு எவ்வளவு உண்ணுமோ அந்த அளவு அந்த எறும்புகளும் இலைகளை வெட்டி எடுத்துவிடும். ஒரு உயரமான மரத்தை ஒரே நாளில் மொட்டை அடித்து விடும் திறமையும் வேகமும் இந்த எறும்புகளுக்கு உண்டு.

2002 ஆம் ஆண்டு மேமாததில் வெளிவந்த ஸ்மித்ஸ்டோனியன் பத்திரிக்கையில் இந்த எறும்புகளைப் பற்றி சொல்லிருப்பது என்ன வென்றால் "வேட்டையாடுவதைத் தவிர தானே தன் உணவை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை மனிதனுக்கு மட்டும்தான் உண்டு என்று நம்மால் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த இலை வெட்டி எறும்புகள் காளான்களை விவசாயம் செய்து தங்களுடைய உணவாக உட்கொண்டு வந்திருக்கின்றன. மனிதனுக்கு இவை முன்னோடியாக இருந்திருக்கின்றன."

அட ! எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பும், கடின உடைப்பும் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இனி கதை சொல்ல முடியது போலிருக்கிறதே? மனிதன் விவசாயத்தைப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் கண்டு பிடித்தான். அவன் இன்னும் பூச்சிகளை ஒழிப்பதற்குத் திண்டாடிக் கொண்டு இருக்கிறான். இந்த எறும்புகள் வளர்க்கும் காளான்களை எச்க்கோவோபிஸீச் என்ற இன்னோரு வகை காளான் வகை அழித்து விடுமாம். தாங்கள் பயிர் செய்த காளான்களை நமது நண்பர்களான எறும்புகள் எப்படி காப்பாற்றினார்கள் என்று கேட்கிறீர்களா? இந்த எறும்புகளின் நெஞ்சுப் புறத்தில் வெள்ளையாக ஒட்டிக் கொண்டு ஒரு பாக்டீரியா வளருகிறது அதற்குப் பெயர் ஸ்டெப்ரோ¦மைஸீஸ் ஏதோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்க்கிறீர்களா ? அது தாங்க நம்ம மருத்துவர்கள் நமக்கு எழுதிக் கொடுப்பாங்களே அந்த ஆண்டி-பயாடிக்கின் மூல காரணமே இந்த ஸ்டெப்ரோ¦மைஸீஸ் என்ற காளான்தான். என்னங்க மூக்கில் கை வைச்சிட்டு உட்கார்ந்து விட்டீர்களா? என்னே இயற்கையின் விந்தை

நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்-ரசித்தது

திருச்சியிலிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பிரார்த்தனைக்காக வந்த சுப்பண்ணாவுக்கு அன்று மிகவும் சோதனையாகி விட்டது. மாலை ஆறு மணிக்கு வந்து சேர வேண்டிய பஸ், பலத்த மழையினால் பல இடங்களில் ரோட்டில் தேங்கிய குளம் குட்டைகளில் ஏறி இறங்கி ஆடி அசைந்து அவரைக் குலுக்கி எடுத்து விட்டது.

அதன் பிறகு ஏதோ ஒரு வளைவில், எதிர்ப்புறம் மிக வேகமாக வந்த பஸ்ஸில் மோதாமல் தப்பிக்க திடீரென பஸ் டிரைவர் ப்ரேக் போட்டதில் இவருக்கு நெற்றியில் சற்று பலத்த அடி. அதன் பிறகு முன் பக்க டயர் ஒன்று வெடித்துப் பஞ்சர் ஆனதில், பஸ்ஸை ஓரம் கட்டி, ஸ்டெப்னி டயர் பொருத்தியதில் வேறு தாமதம்.
போன் செய்து குருக்களிடம் தான் வருவது பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தது சற்று ஆறுதலாக இருப்பினும் இரவு ஒன்பது மணி ஆகி விட்டதால் கோவில் சாத்தி விடாமல் இருக்கணுமே, குருக்கள் இருக்கணுமே, ஐந்து சன்னதிகளில் ப்ரார்த்தனைப்படி இன்றைக்கே
அர்ச்சனை செய்யணுமே என்ற விசாரத்தில் கோவிலுக்குள் நுழைந்தார். நல்ல வேளையாக அவர் ப்ரார்த்தனை நல்ல படியாகவே முடிந்து வெளியே வர பதினோரு மணிக்கு மேல் ஆகி விட்டது. அவருக்குப் பசியும் வயிற்றைக் கிள்ளியது.

சுப்பண்ணா, திருச்சி டவுனில் ஒரு ஹோட்டல் நடத்துபவர். சாதாரண கிளீனர், சர்வர், சரக்கு மாஸ்டர், சமையல் காரர், மேற்பார்வையாளர் எனப் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இன்று முதலாளியாக உள்ளவர். மிகவும் கண்டிப்பும், கறாருமானவர். தன்னிடம் வேலை
பார்ப்பவர்கள் மட்டுமின்றி, சாப்பிட வருபவர்களையும் சத்தம் போட்டு, உருட்டி, மிரட்டி, தானே இந்த உலகில் எல்லோருக்கும் படியளக்கும் பரமசிவன் என்பது போல சர்வாதிகாரம் செய்பவர். அவருடைய ஆஜானுபாகுவான உருவம் மற்றும் வயதுக்கு மரியாதை கொடுத்து, அவரிடம் எதற்கு வம்பு என அவரின் அட்டகாசத்தை அனைவரும் சகித்துக் கொண்டனர். டி•பன் என்றால் ஏதாவது இரண்டு அயிட்டங்கள் மட்டுமே தான் தயாரித்து விற்பவர். அதுவும் குறிப்பிட்ட
சில மணி நேரங்களே அந்த விற்பனை நடக்கும். ஓரளவு தரமான தயாரிப்புக்களாகவே அவை இருக்கும். அதனால் வேறு வழியில்லாமல், அந்தப் பகுதிப் பொது மக்களும் அவருடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

இப்போது இரவு மணி 11.25. இந்த இரவு நேரத்தில் சாப்பிட டி•பனோ சாப்பாடோ கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த அவருக்கு அந்த ஒரு ஹோட்டலின் விளம்பரப் பலகையில் ட்யூப் லைட் எரிவது கண்ணில் பட்டது. அந்த ஹோட்டலை நெருங்கியதும், அங்கிருந்த அமரும் நாற்காலிகள் அனைத்தும், சாப்பிடும் மேஜைகளின் மேல் அடுக்கப்பட்டு, பெருக்கி சுத்தம் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவப்படுவது தெரிந்தது. உட்புறம் ஏக்கத்துடன் எட்டிப் பார்த்த அவரை, அடுப்பங்கரைப் பக்கத்திலிருந்து வாசல் பக்கம் வந்த ஒருவர் "வாங்கோ, வாங்கோ!" என வரவேற்றார்.

சுத்தம் செய்யப்பட்ட ஒரு ஓரத்து மேஜையின் முன்பு நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டு, அதில் அவரை அமரச் சொல்லி •பேனைத் தட்டி விட்டு, குடிக்கத் தண்ணீர் கொடுத்து "நீங்க எந்த ஊரு, என்ன சமாசாரம், கோவிலுக்குப் போய் ஸ்வாமி தரிஸனம் பண்ணினேளா? சாப்பாடு ஆச்சா?" என்று கனிவுடன் வினவினார்.

தன் பயணக் கதையைச் சுருக்கமாக எடுத்துரைத்தவர், தனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று வினவினார்

"ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி

உள்ளே போனவர், சொன்ன படியே பத்து நிமிடத்திற்குள் அவருக்குப் பெரிய இலை ஒன்றைப் போட்டு, தண்ணீர் தெளித்து, சுடச்சுட இரண்டு ஊத்தப்பங்களும், சூடான சாம்பாரும் ஊற்றி மேலும் ஒரு சில ஊத்தப்பங்கள் எடுத்து வர உள்ளே ஓடினார். சரியான பசி வேளையில் சூடான சுவையான அந்த ஊத்தப்பங்களும் சாம்பாரும் அவருக்கு தேவாமிர்தமாக இருந்தன. ஏழெட்டு சின்னஞ்சிறு ஊத்தப்பங்கள் சாப்பிட்ட அவர் திருப்தியாக ஒரு பெரிய ஏப்பம் விட்டு மேற்கொண்டு ஒன்றும் வேண்டாம், போதும் என்று சொல்லிக் கை கழுவ உள்ளே போகும் வழியில், கண்ணாடி போட்ட அலமாரி ஒன்றில், ஒரு பெரிய அகலப் பாத்திரத்தில் சுமார் 10 இட்லியும், 4 வடைகளும், ஒரு சிறிய பாத்திரம் நிறைய வெண்பொங்கலும் இருக்கக் கண்டார். கை அலம்பி விட்டு வரும் திருச்சிக் காரருக்கு சூடான பாதாம் பாலை ஆற்றிக் கொண்டிருந்தார் அந்த ஹோட்டல் ஆசாமி.

ருசி மிக்க அந்தப் பாலையும் வாங்கி அருந்திய இவருக்கு வயிற்றில் பால் வார்த்தது போலப் பசி அடங்கி, புதுத் தெம்பு வந்தது. நன்றி தெரிவித்த அவர், "இந்தக் கடைக்கு நீ தான் முதலாளியா" என்றார்.

"இல்லை ஐயா, முதலாளி வெளியே போய் இருக்கிறார். இப்போது வந்தாலும் வரலாம்" என்றான். "கடையில் தான் ஏற்கனவே இட்லியும்,

வடையும், பொங்கலும் ரெடியாக உள்ளதே! அவற்றை விற்றுக் காசாக்காமல் எதற்கு ஊத்தப்பம் தயாரித்தாய்? என்று கேட்டார்.

"இலாபத்தை விட, இங்கு எங்களிடம் வரும் மக்களுக்குச் சிறந்த சேவை செய்வதையே எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்கள் இங்கு வந்து சூடாக, சுவையாகச் சாப்பிட்டு வயிறார வாழ்த்துவதையே நாங்களும், எங்கள் முதலாளியும் மிகவும் விரும்புகிறோம். அந்த ஆறிப் போன இட்லியையும் வடையையும் உங்களுக்குக் கொடுத்தால், உங்கள் பசி வேண்டுமானால் தீரலாம். ஆனால் அதில் ஒரு ருசி இருக்காது. சிலருக்கு வயிற்றுக்கும் கோளாறாகும். உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்படாது. எங்கள் ஹோட்டலின் பெயர் கெடுவதோடு, இந்த ஊருக்கே ஒரு கெட்ட பெயரை அது ஏற்படுத்தும். இங்கு, பல வெளியூர்களிலிருந்து கோவிலுக்கு வருபவர்கள், உங்களைப் போல அகால வேளையில் பசியுடன் வருவது ரொம்பவும் சகஜம். 24 மணி நேரமும், யார் பசியென்று எங்களிடம் வந்தாலும், உணவளிக்க வேண்டியதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம். அதற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், எரிபொருட்கள், துரிதமாக சமையல் செய்ய உதவும் நவீன உபகரணங்கள் என எல்லாம் எப்போதும் தயார்

நிலையில் எங்களிடம் வைத்திருக்கிறோம். எங்களில் யாராவது ஒருவராவது இரவு முழுவதும் கடையில் கண் விழித்துக் காத்திருப்போம். பகலில் வருவோரை விட, நாங்கள் மறுத்தாலும்
கேட்காமல் இரவில் அகாலத்தில் வருவோர் அன்புடன் தரும் உபரிப் பணத்தால் தான் இலாபமே அதிகரிக்கிறது" என்று ஒரு பெரிய விளக்கம் கொடுத்தான்.

"மேலும் மிஞ்சிப் போன ஒரு சில இட்லி வடை போன்றவற்றை வாங்கிச் செல்லக் காலையில் வரும் ஏழைகளையும்நாங்கள் இல்லை எனச் சொல்லாமல், ஆதரிக்க வேண்டும்" எனவும் கூறினான் அந்த ஆசாமி.

அவன் பேச்சில் காந்தம் போல ஈர்க்கப்பட்டவர் "உனக்கு இங்கே எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?" என்று கேட்டார்.

"சம்பளம்னு எதுவும் தனியாகக் கிடையாது, ஐயா! எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற வித்யாசமும் கிடையாது. முதல் போட்டவர் முதலாளி தான். அவரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் ஆறு பேர் தான் இந்தக் கடையை நிர்வகித்து நடத்தி வருகிறோம்.

எல்லோரும் ஒரே ஊர்க்காரங்க. எல்லாச் செலவும் போக மிஞ்சும் இலாபத்தில் முதல் போட்ட அவருக்குப் பாதியும், மீதியை நாங்கள் ஐந்து பேரும் சமமாகப் பிரித்துக் கொள்கிறோம்" என்றான்.

அந்த நள்ளிரவு நேரத்தில் தன் தொழில் சம்பந்தமான பல்வேறு தொழில் நுட்பங்களைப் புரிந்து கொண்ட அவர், வலுக்கட்டாயமாக ஐநூறு ரூபாய் பணத்தை அவனிடம் திணித்து விட்டுப் புறப்பட்டார், தானும் நாளை முதல் ஒரு புது மனிதனாக மாறுவதற்கு.

Apr 26, 2009

ஐன்ஸ்டீனின் மூளை!

உலகின் சிந்தனைப் போக்கையே மாற்றிய சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன். அவரது மூளை பற்றிய மர்மம் அவர் இறந்த பிறகு ஆரம்பித்தது.

அவரது மூளையை அவரது டாக்டர் ரகசியமாக எடுத்து ஒளித்து வைத்திருந்தார். பின்னால் அது தெரிய வர அதைப் பல துண்டுகளாக்கி பல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அதைத் தந்தார். இந்த ஆய்வின் மூலம் ஐன்ஸ்டீன் என்ற மேதை பற்றிய மர்மம் விளங்கியது ஒரு புறம் இருக்க, மூளை பற்றிய மர்மத்தின் ஒரு பகுதியும் விளங்கியது!

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூளையியல் நிபுணரான (neuro anatomist) மரியன் டயமண்ட் என்னும் பெண் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதியைத் தன் ஆராய்ச்சிக்காக விரும்பிப் பெற்றார். அதை ஆராய்ந்ததில் முக்கிய உண்மை ஒன்று அவரால் அறிய முடிந்தது.

தூண்டுதலுக்கு உட்படும்போதெல்லாம் மூளை அதை ஏற்றுச் செயல்படுகிறது என்றும் புதிய சவால்களை எதிர்கொண்டு தனது ஆற்றலை அதிகப் படுத்திக் கொள்ளும் வலிமை வாய்ந்தது மூளை என்றும் அவர் கண்டுபிடித்தார்.

அறுபதுகளில் பெர்க்லியைச் சேர்ந்த மார்க் ரோஸன்வ்ச் என்ற விஞ்ஞானி ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைப்பதன் மூலம் அவற்றின் மூளையில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். இப்படி விசேஷமான சுற்றுப்புற சூழ்நிலை இல்லாத இடங்களில் வாழும் எலிகளை விட நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சியை அடைவதை அவர் கண்டார்.

மூளையைத் தூண்டும் சுற்றுப்புறச் சூழ்நிலை மூளைக்கு அதிக செயல் திறனை அளிக்கிறது! இந்த வகையில் ஆராய்ச்சியைத் தொடர்ந்த டயமண்ட் 600 நாள் வயதான எலியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். மனிதனுடன் ஒப்பிடுகையில் இது 60 வயதுக்குச் சமமானது. 766 நாள் வாழும் எலியைக் கூட அவர் சோதனைக்கு உட்படுத்தினார். எலிகள் இருக்குமிடத்தில் ஏராளமான பொருள்களை அவர் வைத்தார். இந்தப் பொருள்களால் தூண்டப்பட்ட எலிகளின் மூளை அவை மிக்க வயதானதாக இருந்த போதிலும் கூட அதிக திறனைக் கொண்டதாக மாறியதை அவர் கண்டறிந்தார்.

எலிகள் ஒரு புறம் இருக்க, மனித மூளை பற்றிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஐன்ஸ்டீனின் மூளை பற்றி 1985ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அது கான்ஸாஸில் ஒரு குளிர்பதனபெட்டியில் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தது. டாக்டர் டயமண்டும் அவரது சகாக்களும் இயற்பியலில் ஐன்ஸ்டீன் பிரபலமாவதற்குக் காரணமான மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தங்கள் ஆராய்ச்சிக்காகக் கேட்டுப் பெற்றனர்.

நெர்வ் செல்களுக்கு கை கொடுத்து ஆதரிக்கும் க்ளியர் செல்கள் (Glear cells) ஐன்ஸ்டீனின் மூளையில் அதிகம் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சி தான் மூளை அமைப்புக்கும் அதன் திறமைக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துக் காட்டும் முதல் ஆராய்ச்சியாகும். வயதானாலும் கூட மூளைக்கு ஆற்றல் குறைவு இல்லை என்பது மரியன் கண்ட உண்மை!

எலிகளின் மூளைக்கும் ஐன்ஸ்டீனின் மூளைக்கும் முடிச்சுப் போடுவது சற்று அதிகப் படியான செயல் என்று யேல் விரிவுரையாளர் வால்டர் ரிச் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதினாலும் கூட டாக்டர் டயமண்ட் வயதுக்கும் மூளையின் ஆற்றல் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக் கூறுகிறார்.

எந்த வயதிலும் முனைப்போடு கற்க ஆரம்பித்தால் மூளை அதற்கு ஈடு கொடுக்கும். ஆனால் பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை நாமே கிழவன் என்று எண்ணி அதன் படி நடக்க ஆரம்பித்தால் மூளையும் கூட கிழடாகவே ஆகி விடுகிறது! ஆகவே இருபது வயதானாலும் சரி, எழுபது வயதானாலும் சரி, மூளை என்றும் இளமை வாய்ந்தது தான்! நாம் அதைப் பயன்படுத்தும் விதத்தில் அது திறனைக் காட்டுகிறது!

இளமையின் ஓரத்தில் இருந்து முதுமை வயதைத் தொட்டுப் பார்ப்பவர்கள் இனி கவலை இன்றி மூளைப் பயிற்சியை மேற்கொண்டு அதிக செயல் திறனைப் பெற்று புதியன பயிலலாம்; செயல் திறனைக் கூட்டலாம்! அது அவர்களுக்கும் நன்மை; சமுதாயத்திற்கும் நன்மை! இது இறந்த பின்னும் ஐன்ஸ்டீன் தனது மூளை மூலம் உலகிற்குத் தரும் நல்ல செய்தி.

Apr 25, 2009

கடல் குதிரையும் காம உணர்வும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் என ஒªவையார் மானிடப் பிறப்பின் மகத்துவத்தைக் குறிப்பிடுகின்றார்.

மனித வாழ்க்கையின் இன்பங்களை, சிற்றின்பம், பேரின்பம் என இருவகைப்படுத்துகின்றனர் சான்றோர்கள். இதில் எது ஒன்று அதிகமானலும், குறைந்தாலும் வாழ்க்கை என்னும் பயிர் வாடி விடத்தான் செய்யும்.

தவறு எனத் தெரிந்தாலும், பல வேளைகளில் மனிதன் மதிமயங்கி மனங்குழம்பி நிலை தடுமாறிவிடுகிறான். ஆசைக்கு அணையிட மகான்கள் அறிவுறுத்திய போதிலும், ஆசையை அணையால் தேக்க யாருக்கும் மனமில்லாமல், அதை வெள்ளமாய்த் திறந்து விடுகின்றனர். அப்படித்தான் சிற்றின்ப ஆசையும்.

தித்திக்கும் கரும்பும் திகட்டும் என்பது அறிந்திருந்தும் ஆதாம் முதற்கொண்டு அனைவரும் செய்யும் தவறு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஊடகங்கள் பெருத்த இந்தக் காலகட்டத்தில், பிஞ்சிலே பழுத்த பழமாகி, வாலிபத்தில் வயதாகிவிடுகின்றனர். அவர்களுக்கான பெருமூச்சினைப் போக்க சிட்டுக் குருவியிலிருந்து, வயாகாரா வரை வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

வசிய மருந்துகள். மனிதர்களின் காம உணர்வைக் கூட்டும் மருந்துகள் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு சமூகங்களிலே புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. இதில் சீனர்கள் தான் முன்னோடிகள். உடலில் ஏற்படும் அத்தனை குறைபாடுகளுக்கும் உணவிலேயே மருந்தைக் கண்டுபிடித்து வைத்தனர். இதனால் உயிர்வாழும் ஜீவராசிகள் அனைத்தும் அவர்களுக்கு ஒரு வகையில் உணவாகத் தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் காம இச்சையைத் தூண்டும் மருந்தாகக் கடல் குதிரை, காண்டாமிருகக் கொம்பு, நட்சத்திர ஆமைகள் எனப் பலவற்றைக் காயவைத்து பயன்படுத்துகின்றனர்.

உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள், பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன, இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு, பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும், நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். ஆம், 1992ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி அந்த ஆண்டில் மட்டும் சுமார் 20டன் கடல் குதிரைகள் உணவாக உட்கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது. 20 டன் கடல் குதிரை உணவு என்பது சுமார் 60 இலட்சம் கடல் குதிரைகளைக் காய வைத்தால்தான் பெறமுடியும்.

ஹாங்காங் மார்க்கெட்டுகளில் காய வைத்த கடல் குதிரை ஒரு கிலோ 1200 அமெரிக்க டாலருக்கு (ரூ 53,000/-) விற்கப்படுகிறது. சீனர்கள் தான் இந்த விலை கொடுத்தும் கடல் குதிரையை வாங்கிச் சாப்பிடுகின்றனர். வேறெதற்கு, காம உணர்வைத் தூண்டத்தான்! உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருப்பதன் இரகசியம் இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு?!!!!!!!

இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது

Apr 24, 2009

"கண்ணீர் - இதயம் சொல்ல முடியாத வார்த்தைகள்"

front_images_46.jpgகண்ணீர் கண்ணீர்!

கண்ணீர் என்றதும் பாச மலரில் சிவாஜி பேசும் வசனம்தான் நினைவிற்கு வரும்.
"ஆனந்தா, நான் என் கண்களையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்.

அதில் இனிமேல் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்" என்று சொல்ல, ஜெமினி "அது என் கடமை" என்பார். ஆக, கண்ணீரில் இரண்டு வகை. ஒன்று ஆனந்தக் கண்ணீர்; இன்னொன்று மெகா சீரியல் கண்ணீர்.

கண்ணீரைப் பற்றி சில அறிஞர்கள் சொல்கிறார்கள்:

"கண்ணீரில் ஒரு புனிதம் இருக்கிறது. அது பலவீனத்தின் அடையாளம் அல்ல - அதுதான் உண்மையான பலம். வாயால் ஆயிரம் வார்த்தைகள் சொல்வதைவிட அதிகம் சக்தி வாய்ந்தது. ஆழ்ந்த துக்கத்தின் அடையாளம் - விளக்க முடியாத அன்பின் சின்னம்"

"எனக்கு மழையில் நனைவது பிடிக்கும். ஏனென்றால், அப்போது என் கண்களிலிருந்து வரும் கண்ணீர் தெரியாது"

"கண்ணீர் - இதயம் சொல்ல முடியாத வார்த்தைகள்"

"நான் அழுததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வரும். ஆனால் நான் சிரித்ததை நினைத்துப் பார்க்கும்போது ஏனோ அழுகை வருவதில்லை!"

"நண்பர்களிடம் அன்பு கண்ணீரில் வெளிப்படுவதால் அன்பிற்கு என்றும் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் கிடையாது" என்று வள்ளுவர் சொல்கிறார்.

சிலர் அழுகையே வராமல் அழுவதுபோல நடிப்பார்கள். இதை நீலிக் கண்ணீர் என்று சொல்கிறார்கள். பெரியார்கூட அவர் மணியம்மையை மணந்தபோது அவரை விட்டுப் பிரிந்தவர்களை அவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதற்காகத்தான் 'கண்ணீர்த் துளிகள்' என்று கேலியாகக் கூறினார்! (பெண்கள் கணவனுக்கு முன்னால் பட்டுப் புடவைக்காக வடிக்கும் கண்ணீரும் இந்த வகையைத்தான் சேரும்!) சில சமயம் சிலர் நமக்கு ஆறுதல் சொல்வதுபோல பொய்யாகக் முதலைக் கண்ணீர் வடிப்பதும் கண்கூடு.

கதைகளில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள் என்று படித்ததுண்டு - ஆமாம்.. அது என்ன கம்பலை?

கண்ணீரைப் பற்றி இப்போது சீரியசாக சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கண்ணீர் என்ற வார்த்தையைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

அது மன உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று சொல்கிறோம். இது சரிதான். மனித இனம் ஒன்றுதான் கண்ணீரின் மூலம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறது. மற்றவர்களிடமிருந்து ஆறுதலையும், அன்பான அரவணைப்பையும் நம் மனம் வேண்டும்போது 'ஆக்சிடாசின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் கண்ணீர் வரும்போது மட்டுமே வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மட்டும்தானா? இல்லை! கண்ணீருக்கு இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.

கண்ணீர் கண்களை சுத்தம் செய்கிறது. கண்ணீரிலிருந்து வெளிப்படும் லிசோசைம்(lysozyme) என்ற என்சைம் பாக்டீரியாக்களை அழித்து கண்ணை நோய் தொற்றுவதிலிருந்து காக்கிறது. நம்முடைய மன அழுத்ததைக் குறைக்கிறது.

கண்ணீர் வெளிப்படும்போது அதிலிருந்து வெளிப்படும் 'என்டார்ஃபின்' என்ற ரசாயனம் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது போதை தரும் மார்பின் அல்லது ஹெராயின் போன்றது. இந்த என்டார்ஃபின்கள் நாம் சிரிக்கும்போதும் வெளிப்படுகின்றன. என்டார்பின்கள் ஒரு வலி நிவாரணி. இவை உடல் வலியையும் மனவலியையும் நீக்குகின்றன. அதனால்தான் நாம் வலியால் துடிக்கும்போதோ அல்லது சோகமான நிகழ்ச்சியின்போதோ அழுகிறோம். அதோடு இந்தக் கண்ணீர் தடுப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதனால்தான் யாராவது மனதில் உணர்ச்சிகளைப் பூட்டி வைத்திருந்தால் "மனசுக்குள்லேயே வச்சுக்காமல் அழுது தீர்த்துடா" என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.

கண்ணீரிலும் சிரிப்பு வரும் என்பதற்காக இந்த ஜோக்.

மனைவி ஒருநாள் இரவு தன் கணவன் படுக்கையில் இல்லாததைக் கண்டு கீழே இறங்கிப் போனாள். அங்கே சமையலறையில் கணவன் கையில் சூடான காபியுடன் ஏதோ யோசனையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தான். மனைவி அவனருகில் சென்று பரிவாக "என்ன ஆச்சுங்க?" என்று கேட்டாள்.

அவன், "நான் 20 வருஷங்களுக்கு முன்னால் நாம் காதலித்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்" என்றான்.

மனைவி கணவன் தன் மேல் கொண்டிருக்கும் அன்பினால் அப்படியே மனமுருகி,
"ஆமாம், நினைவிருக்கிறது" என்றாள்.

"நாம் பீச்சில் பேசிக் கொண்டிருந்தபோது உன் அப்பா நம்மைப் பார்த்துவிட்டார். அப்போது அவர் 'என் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்; இல்லாவிட்டால் நான் உன்னை இருபது வருஷங்கள் ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றது நினைவிருக்கிறதா?" என்று கணவன் கேட்டான்.

மனைவி நினைவுபடுத்திக் கொண்டாள்.

"அப்படி ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் கூட தேவலையாக இருந்திருக்கும்; இப்போது நான் விடுதலை ஆகியிருப்பேன்" என்றான் கணவன்.

Apr 23, 2009

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன்.

என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.

nick_1.jpg

கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.
குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.

nick_2.jpg

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

nick_3.jpg

ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.

kalai


CALLS FOR APRIL 23

OPEN CALLS
RECLTD C 108.35 S HOLD LONG CSL 107.8 IN 103.85
PFC C 152.65 S HOLD LONG CSL 149.9 IN 144.55 RE 50% BOOK AT 160
PRAKASH C 65.9 S HOLD LONG CSL 62.28 IN 68.55
PRISMCEM C 27.8 S HOLD LONG CSL 25.57 IN 27.45
PUNJLLOYD C 109 S HOLD SHORT CSL 116.4 IN 112.45
MARUTHI C 754.15 S HOLD SHORT CSL 8401.3 IN 788.75
STER C 367.2 S HOLD SHORT CSL 496.8 IN 382.1
C MEANS CLOSE, S MEANS STRATEGY FOR TODAY, CSL MEANS CLOSEING STOPLOSS,IN MEANS INITIATED AT, RE MEANS REMARKS
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இதை படிக்கவும் http://dg-tirupur.blogspot.com/2009/03/blog-post_29.html



Apr 22, 2009

படித்ததில் ரசித்தவை

ஒருவன் கீழே விழுந்தால் இந்த உலகமே அவன்மீது ஓடத்துவங்கும்.

திறமை மிக்கவன் எக்ஸிமோக்களிடம் கூட குளிர்சாதனப்பெட்டியை விற்றுவிடுவான்.

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள்.

செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும். கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும்.

குணமிருந்தால் விகாரமும் அழகாக இருக்கும்; குணமில்லையேல் அழகும் விகாரமாகிவிடும்.

சோகம் மேகம் போன்றது; கனமாகி விட்டால் விழுந்து விடும்.

பணத்தை முட்டாள் கூட சம்பாதிக்கலாம். ஆனால் புத்திசாலியால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

வரலாறு படிப்பது நன்று; வரலாறு படைப்பது அதைவிட நன்று.

தோல்வி என்பது எடுத்த காரியத்தைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. நீ தோற்றுவிட்டாய் என்பதாகாது.

நாம் செலவு செய்யும்போது பணம் ஜெட் வேகத்தில் பறக்கும்; வரும்போது நொண்டியடித்துக்கொண்டுதான் வரும்.


CALLS FOR APRIL 22

OPEN CALLS
RECLTD C 108.5 S HOLD LONG CSL 105.8 IN 103.85
PFC C 156.45 S HOLD LONG CSL 151.8 IN 144.55
PRAKASH C 68.35S HOLD LONG CSL 59.62 IN 68.55
PRISMCEM C 27.45S HOLD LONG CSL 24.47 IN 27.45

PUNJLLOYD C 102.8 S HOLD SHORT CSL 122.8 IN 112.45
NEW CALLS
IDEA C 58.4 BUY CSL 53.35
NOIDATOLL C 31.4 BUY CSL 25.67
TV-18 C 94.85 BUY CSL 81.9
KALINDEE C 121.1 BUY CSL 104.7
EMCO C 55.45 BUY CSL 49.83
ORBITCOR C 80 BUY CSL 68.48
DISHTV C 31.5 BUY CSL 28.2
NAGARFERT C 23.35 BUY CSL 21

ZEEL C 120.7 SHORT CSL 137.5
TATASTEEL C 244.2 SHORT CSL 271.7
ICICIBANK C 398.75 SHORT CSL 443.1
MARUTHI C 788.75 SHORT CSL 852.7
TATAMOTORS C 233.3 SHORT CSL 250.9
STER C 382.1 SHORT CSL 406.8
PNB C 465.7 SHORT CSL 504.9
RELCAPITAL C 507 SHORT CSL 547.3
C MEANS CLOSE, S MEANS STRATEGY FOR TODAY, CSL MEANS CLOSEING STOPLOSS,IN MEANS INITIATED AT, RE MEANS REMARKS
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இதை படிக்கவும் http://dg-tirupur.blogspot.com/2009/03/blog-post_29.html



Apr 21, 2009

தமாஷ்

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்

தமிழிஷில் வாக்களிக்க http://www.tamilish.com/Nagaichchuvai/தமாஷ்-1/

CALLS FOR APRIL 21

OPEN CALLS
WOCKPHARMA RE 50% BOOK AT 100, 50% BOOK 95
RECLTD C 112.15 S HOLD LONG CSL 103 IN 103.85
PFC C 161.7 S HOLD LONG CSL 147.9 IN 144.55
NEW CALLS
PRAKASH C 68.55 BUY CSL 57.27
PRISMCEM C 27.45 BUY CSL 23.9
RELIANCE C 1715 SHORT CSL 1792
HINDALCO C 53.6 SHORT CSL 61.13
TATAPOWER C 859.45 SHORT CSL 909.5
PUNJLLOYD C 112.45 SHORT CSL 130.2
R COM C 215.85 SHORT CSL 233.4
M&M C 449.75 SHORT CSL 473.5
NIFTY SHORT ONLY CLOSE BELOW 3351


Apr 20, 2009

CALLS FOR APRIL 20

OPEN CALLS
WOCKPHARMA C 93.2 S HOLD LONG CSL 89.72 IN 84.3 RE 50% BOOK AT 100
RECLTD C 109.2 S HOLD LONG CSL 98.15 IN 103.85
PFC C 154.25 S HOLD LONG CSL 139.4 IN 144.55
NEW CALLS
SKUMARSYNF C 28.45 BUY CSL 24.67
RELIANCE C 1716.95 SHORT CSL 1820
STER C 388.25 SHORT CSL 426.6
JSWSTEEL C 315.65 SHORT CSL 371.2
CAIRN C 186.35 SHORT CSL 206
SAIL C 106.85 SHORT CSL 119.4
HINDALCO C 55.1 SHORT CSL 63.7
C MEANS CLOSE, S MEANS STRATEGY FOR TODAY, CSL MEANS CLOSEING STOPLOSS,IN MEANS INITIATED AT, RE MEANS REMARKS
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இதை படிக்கவும் http://dg-tirupur.blogspot.com/2009/03/blog-post_29.html



DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post